Friday 24 June 2011

கோழைன்னு தான் சொல்லணும்...

புதன் அன்னைக்கு பேப்பர்ல ஒரு நியூஸ் படிச்சேன். ஒரு பனிரெண்டாவது படிக்கற பையன் தூக்கு போட்டு செத்துட்டான்னு. என்னடா விசயம்னு பாத்தா பாராட்டறதா இல்ல திட்டரதானே தெரியல.

கணக்கு பாடத்துல சந்தேகம் கேட்டதுக்கு வாத்தியாரு திட்டினாராம். அந்த வாத்தியாரு மேல நடவடிக்கை எடுக்க பசங்க கிட்ட இருந்து கையெழுத்து வாங்கி இருக்கான். இத கேட்ட மத்த மூணு வாத்தியாருங்களும் திட்டி இருக்காங்க. இதனால மனசு நொந்து போயி தூக்கு போட்டு கிட்டான். 7  பக்கத்துல ஒரு லெட்டர் எழுதி வச்சுட்டு போய்ட்டான்.

இந்த government  ஸ்கூல் வாத்தியாருங்க எல்லாம் பொறுப்பு இல்லாம இப்பிடி சரியாய் பாடம் நடத்தாம இருக்காங்க. என்னோட சாவுக்கு அப்பறமாவது இது மாதிரி பொறுப்பு இல்லாம இருக்கற டீசெர்ஸ் திருந்தணும்னு எழுதி இருக்கான்.

அவனோட நோக்கம் நல்லா தான் இருக்கு.ஆனா அதுக்கு உயிரை விடணும்னு அவசியம் இல்லையே. அவன் செஞ்சது கோழை தனமா இல்ல இருக்கு. எல்லா பிரச்சனைக்கும் உயிரை விடறதுதான் தீர்வுன்னா அப்ப யாருமே உயிர் வாழ முடியாதே. இந்த காலத்துல இருக்கற ஸ்கூல் , காலேஜ் படிக்கற பிள்ளைங்க எல்லாம் எதுகெடுத்தாலும் உயிரை விட முடிவு பண்ணிடறாங்க. இந்த எண்ணம் மாறனும். சின்ன புள்ளைல இருந்தே தைரியத்த சொல்லிகொடுக்கனும். எதையும் எதிர்த்து போராடற மன பக்குவத்த வளக்கணும். சாவு முடிவு இல்லன்னு சொல்லி கொடுக்கணும்.


No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.