ஸ்ஸ்ஸ்ஸ்... அப்பா ஒரு வழியா காலைல எந்திரிச்சு சமையல் வேலையெல்லாம் முடுசாச்சுன்னு நெனைக்கும் போதே அத விட பெரிய வேலை ஒன்னு இருக்கறது நெனவுக்கு வரும். வேற என்ன எல்லாம் நிக்கிய எழுப்பரதுதான்.
ஆச்சு ஒரு வழியா 7 ல இருந்து எழுப்ப ஆரம்பிச்சு 7 .4 0 கு எழுந்தாச்சு.அத எழுப்பறதுக்குள எத்தன முறை செல்லம், குட்டிம்மா நு கொஞ்ச வேண்டியிருக்கு. அடுத்த பல் வெலக்கியாச்சு. ஏற்கனவே லேட் ஆயிடுச்சு.அதனால நான் சொன்னேன்.
"டிரெஸ்ஸ கழட்டிட்டு நேர பாத்ரூமுக்கு போ. டைம் ஆகிடுச்சு பாரு."
எங்க வீட்டுல பெட்ரூம்ல இருக்கற பாத்ரூம்ல தான் அந்த மேடம் குளிப்பாங்க. சொல்லிமுடிச்ச அடுத்த நிமிஷம் வந்த பதில் கேள்வி..
"எப்பிடிம்மா நேரா பாத்ரூமுக்கு போக முடியும்.பெட்ரூம் போயி தான் போனும்..." ஒரு நக்கலான பார்வை......
எல்லாம் என் நேரம். இப்பிடி எடக்கு மடக்கா யோசிக்கற ஒருத்தர(எல்லாம் என் ஆத்துகாரர் தான்) வச்சுட்டே 4 வருசமா குப்பைய கொட்ட முடியல... இப்போ நீயுமா???????? உர்ர்ரர்ர்ர்.....
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.