Tuesday 21 June 2011

Chicken kulambu

தேவையானவை:

சிக்கன் - 1 /2 கிலோ
வெங்காயம் - 1 பெரியது(பொடியாக நறுக்கவும்)
தக்காளி - 2 (பொடியாக நறுக்கவும்)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 4 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 /4  ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 /2  ஸ்பூன் (சுவைக்கேற்ப)
கொத்தமல்லி தூள் - 4  ஸ்பூன் 
உப்பு - சுவைக்கேற்ப

அரைக்க:

தேங்காய் - 1 /2 மூடி
பட்டை - 2
கிராம்பு - 2 
சோம்பு - 1 ஸ்பூன்
கசகசா - 1 ஸ்பூன்
மிளகு - 1 /2  ஸ்பூன்
சின்ன வெங்காயம் - 3 (optional )
 
அரைக்க கொடுத்துள்ளவற்றை நன்கு நைசாக அரைக்கவும்.

தாளிக்க:

கடுகு - 1  ஸ்பூன்
வுளுந்து - 1 /2  ஸ்பூன்
சோம்பு - 1 /4  ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை:

சிக்கனை நன்கு சுத்தம் செய்து கொள்ளவும்.

அடுப்பை பற்ற வைத்து அதில் 3  ஸ்பூன் எண்ணெய் வூற்றி வெங்காயத்தை நன்கு வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானவுடன் தக்காளி,இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.தக்காளி நன்கு வதங்கிய பின் சிக்கனை சேர்த்து வதக்கவும்.சிக்கனில் இருந்தே தண்ணீர் வரும் எனவே தண்ணீர் வூற்ற வேண்டாம். சிக்கனில் இருந்து தண்ணீர் வெளியேறிய பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், உப்பு சேர்த்து கிளறவும்.5 நிமிடங்களுக்கு கொதிக்க விடவும். பின்னர் அரைத்து வைத்துள்ள மசாலாவை வூற்றவும். இந்த கலவையை குக்கருக்கு மாற்றி நன்கு வேக விடவும்.



பொதுவாக 5 முதல் 6  விசில் தேவைபடலாம். பின்னர் குக்கரை அடுப்பில் இருந்து இறக்கி விசில் போனவுடன் தாளிக்க தேவையான வற்றை தாளித்து வூற்றவும்.

கடைசியாக சிறிதளவு கொத்தமல்லி தளை தூவவும்.





இட்லி,தோசை, சாதத்திற்கு ஏற்ற குழம்பு இது.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.